கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை சீசன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை சீசன் நிலவும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். செவ்வாய்க்கிழமை இங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.