தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப்.9) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கிழக்கு திசை காற்று வலுவடைந்துள்ளதால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப்.9) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.