திருப்பூரில் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி, தமிழிசை, ஹெச்.ராஜா பங்கேற்பு

திருப்பூர் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திருப்பூரில் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி, தமிழிசை, ஹெச்.ராஜா பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இதையடுத்து அதே பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா, தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், முருகானந்தம், நரேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com