இந்த மாத இறுதிக்குள் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை தேமுதிக வெளியிடும் என, அக் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் 2 வாரங்களில், சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்புவார். அவர்தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார் அவர்.