பேரறிவாளன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்டோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் நீதி கேட்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 
செல்லும் இடங்களில் எல்லாம் 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த உணர்வுகளின் ஓசை இன்னும் ஆளுநர் மாளிகையை மட்டும் எட்டவில்லையோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு அமைச்சரவைப் பரிந்துரைத்து சரியாக 151 நாள்கள் ஆகி விட்டன. 
7 தமிழர்களின் விடுதலைக்கு  எதிராக இருந்த அனைத்து முட்டுக்கட்டைகளும் தகர்க்கப்பட்டுவிட்டன. அவ்வாறு இருந்தும் இந்த விஷயத்தில் ஆளுநர் புரோகித் முடிவெடுக்காமல் தாமதம் செய்வது அறமான, நியாயமான செயல் அல்ல.
7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை என்றால் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை திருப்பி அனுப்பியிருக்கலாம். ஒருவேளை அவ்வாறு அனுப்பியிருந்தால் தமிழக அரசு, அதே பரிந்துரையை மீண்டும் அனுப்பும்பட்சத்தில் அவர்களை விடுதலை செய்து ஆணையிடுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லாமல் போய்விடும். ஆனால், அதையும் செய்யாமல் அமைச்சரவையின் பரிந்துரையைக் கிடப்பில் போட்டிருப்பதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
 7 தமிழர்களையும் உடனடியாக ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com