தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
இதுகுறித்து அவர் புதன்கிழமை அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வர இன்னும் ஒருவாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் போலீஸார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதால் கொஞ்சம் அதிக இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட தேவை இல்லை என்றார் அவர்.