டிஜிட்டல் பேனர்: அதிகாரிகள் வானத்தில் பறக்கிறார்களா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

டிஜிட்டல் பேனர் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பேனர்: அதிகாரிகள் வானத்தில் பறக்கிறார்களா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி


சென்னை: டிஜிட்டல் பேனர் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவையில் 16ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் வழக்கில் தொடர்ந்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பை செய்து வருகிறது.

விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். சாலையில் செல்கிறார்களா? அல்லது விமானத்தில் பறக்கிறார்களா?

நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினால் கேட்டு சொல்வதாக அதிகாரிகள் பதில் அளிக்கிறார்கள். விதி மீறிய பேனர்கள் வழக்கில் கடந்த  8 ஆண்டுகளாக நீதிமன்றம் உத்தரவிட்டு, பேனர்களை அகற்ற உத்தரவிட்டு வருகிறது. பேனர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது என்று தமிழக அரசுக்கு தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com