இந்திய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமாகத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாது, அவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தாயகத்தை பாதுகாக்கக்கூடிய ராணுவ வீரர்கள் மீது கோழைத்தனமாகத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாது, அவர்களுக்குத் தக்க பதிலடியும் கொடுக்க வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும்.தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
மக்களவைத் தேர்தல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது நிலையைத் தெளிவுப்படுத்தியிருக்கிறார். எந்த கட்சியுடன் தமாகா கூட்டணி சேர்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றார் வாசன்.