நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மகா கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மகா கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். உங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் அது நல்ல முடிவாக இருக்கும்" என்றார்.
இதனிடையே பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் நாளை சென்னைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனால், கூட்டணி குறித்தான இறுதி முடிவுகள் ஓரிரு நாட்களில் உறுதியாகிவிடும் என்று தெரிகிறது.
முன்னதாக, பாஜக தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் கடந்த 14-ஆம் தேதி சென்னையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.