சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், ஒருங்கிணைந்த குற்றவியில் நுண்ணறிவு பிரிவு எஸ்பி ராஜன் மற்றும் வேலூர் சரக டிஐஜி வனிதா ஐபிஎஸ் அதே பணயில் தொடர்வர்.
ஐபிஎஸ் அதிகாரி வி.பாலகிருஷ்ணன் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். வி. பாலகிருஷ்ணன் சென்னை ரயில்வே காவல்துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு காவல்துறை டிஐஜி மற்றும் இணை ஆணையராக செந்தில்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக ராமநாதபுரம் கடலோர காவல்துறை எஸ்பியாக இருந்த இ.டி. சாம்சனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.