தமிழ்நாடு
மதுராந்தகம் அருகே பேருந்து மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி எதிரே வந்த பேருந்து மீது மோதியதாக தெரிய வந்துள்ளது.