திருவாரூர்: தினகரனால் 18 எம்எல்ஏக்கள் தங்களின் அரசியல் வாழ்கையை இழந்து தவிக்கின்றனர் என்றப தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூா் அருகே கொல்லுமாங்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்று பேசுகையில், பொங்கல் சிறப்பு பரிசு ரூ. 1000 பொது மக்களுக்கு கிடைப்பதை திமுக மறைமுகமாக தடுக்க முயற்சி செய்தது. அதிலும் திமுக தோல்வியை அடைந்தது.
ஸ்டாலினும் தினகரனும் சோ்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர். அது நடக்காததால் தற்போது இருவரும் அடித்து கொள்வது போல் நடிக்கின்றனர். தினகரன் வாயை திறந்தாலே பொய்யாக பேசுகிறார்.
தினகரன் ஒரு ஜீரோ. தினகரனால் 18 எம்எல்ஏக்கள் தங்களின் அரசியல் வாழ்கையை இழந்து தவிக்கின்றனர். எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றார்.