திருச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசிய கட்சிகளுடன் அமமுக கூட்டணி வைத்துக்கொள்ளாது. ஏற்கனவே, இது குறித்து கூறியியுள்ளேன். அதில் உறுதியாக உள்ளோம்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்றும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில், தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்றார்.
மேலும், கொடநாடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று தினகரன் கூறினார்.