முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 300 கன அடியாக குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி 30 மெகாவாட்டாக குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லை. இதனால், அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அணைக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 48 கன அடியாக இருந்தது.
அணையின் நீர் மட்டம் 118.25 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 2,312 மில்லியன் கன அடியாக இருந்தது. இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 300 அடியாக குறைக்கப்பட்டது.
பெரியாறு அணை போர்பை டேமிலிருந்து லோயர்கேம்ப்பிற்கு வரும் தண்ணீர் மூலம் நான்கு மின்னாக்கிகள் இயக்கப்பட்டு, தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது விநாடிக்கு 300 கன அடி தண்ணீரே வெளியேற்றப்படுவதால், ஒரு மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு 30 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.