சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) கேள்வி நேரம் முடிந்ததும், பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.