தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தேர்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் இருந்து 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வானது சென்னையில் உள்ள தேர்வு மையத்தின் தேர்வுக் கூடங்களில் காலையில் மட்டும் நடைபெறுகிறது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் என 181 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 9 ஆயிரம் பேர் முதன்மைத் தேர்வை எழுதவுள்ளனர்.