கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில், ஆத்மாநாம் விருதுக்கு கவிஞர் வெய்யில் எழுதிய அக்காளின் எலும்புகள்' கவிதைத் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகும் ஒரு கவிதை நூலுக்கு கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பாக மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது, கவிஞர் வெய்யில் எழுதிய அக்காளின் எலும்புகள்' கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படவுள்ளது. ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன், விருதுப் பட்டயமும் விருதாளர் படைப்புகள் குறித்த புத்தகமும் வெளியிடப்படும்.