சென்னை: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்தது.
சென்னையில் கிண்டி, தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடரந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை சரிவர பொழியாத நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.