சந்திராயன்-2 கௌன்டௌன் தொடக்கம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் திங்கள்கிழமை விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.
சந்திராயன்-2 கௌன்டௌன் தொடக்கம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் திங்கள்கிழமை விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.

அதிக எடையை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுடன் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. 

இது இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணியாகும். விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுமார் 45 நாள்கள் பயணித்து, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை அடையும். நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்கப்படுகிறது. 

இந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'ரெட்ரோ ரிப்ளெக்டர்' என்ற கருவியையும் சந்திரயான்-2 நிலாவுக்கு கொண்டு செல்ல உள்ளது. 

இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தில் சந்திராயன்-2 தனது தடத்தை பதிக்கவுள்ளது.

இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 20 மணி நேர கௌன்டௌன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com