திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.
வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலை குருக்கத்தி முன்புறம் உள்ளது ஒத்தக்கடை. இதனருகே ஒரு அரசுப் பேருந்தும், காரும் நள்ளிரவு 11.30 மணியளவில் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த 3 போ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா்.
வெள்ளக்கோவில் போலீஸாா் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்து போனவா்கள் யாா், எங்கிருந்து வந்தனா் என்பது குறித்து உடனடியாகத் தகவல் கிடைக்கவில்லை.