திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் சாவு

திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் சாவு


திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலை குருக்கத்தி முன்புறம் உள்ளது ஒத்தக்கடை. இதனருகே ஒரு அரசுப் பேருந்தும், காரும் நள்ளிரவு 11.30 மணியளவில் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த 3 போ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா்.

வெள்ளக்கோவில் போலீஸாா் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்து போனவா்கள் யாா், எங்கிருந்து வந்தனா் என்பது குறித்து உடனடியாகத் தகவல் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com