எனக்கு யாரும் வக்காலத்துவாங்குவதில்லையே?: பேரவைத் தலைவர் ஆதங்கம்

பேரவையில் அவரவர் உறுப்பினர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே தவிர, எனக்கு யாரும் வக்காலத்து வாங்குவதில்லையே' என்று பேரவைத் தலைவர் தனபால் ஆதங்கத்துடன் கூறினார்.
எனக்கு யாரும் வக்காலத்துவாங்குவதில்லையே?: பேரவைத் தலைவர் ஆதங்கம்


பேரவையில் அவரவர் உறுப்பினர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே தவிர, எனக்கு யாரும் வக்காலத்து வாங்குவதில்லையே' என்று பேரவைத் தலைவர் தனபால் ஆதங்கத்துடன் கூறினார்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் சரவணன் பேசிக்கொண்டிருந்த போது, உரையை நிறைவு செய்யுமாறு பேரவைத் தலைவர் கூறினார். அப்போது திமுக உறுப்பினர்கள் சிலர் எழுந்து, இன்னும்  சில நிமிடங்கள் பேச அனுமதியுங்கள்' என்று கூறினர். 
அப்போது பேரவைத் தலைவர் தனபால், எல்லோரும் அவரவர் உறுப்பினர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். எனக்கு யாரும் வக்காலத்து வாங்குவதில்லையே' என்று ஆதங்கத்துடன் கூறினார்.  இதனால், பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டதோடு, திமுக உறுப்பினர்களும் அமைதியாக அமர்ந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com