எப்போதும் அம்மாவின் ஆட்சிதான்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான், எங்கள் மம்மியின் ஆட்சிதான் நடைபெறும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
எப்போதும் அம்மாவின் ஆட்சிதான்: அமைச்சர் ஜெயக்குமார்


தமிழகத்தில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான், எங்கள் மம்மியின் ஆட்சிதான் நடைபெறும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசும்போது, ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) பொறுமையாக இருக்கிறார். அவர் ஆடிக்காற்றைப் போல வீசத் தொடங்கினால், அதிமுக ஆட்சி அடித்துச் செல்லப்படும்' என்றார்.
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டு கூறியது:
இப்போது ஆடிக்காற்று வீசுவதே இல்லை. அதனால், அம்மியும் பறக்கப் போவது இல்லை என்றார்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: அம்மி என்பதெல்லாம் பழைய கதை. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர்தான் எல்லோரின் வீடுகளில் இருக்கிறது. அதனால், எப்போதும் எங்களின் அம்மாவின் ஆட்சிதான். எங்கள் மம்மியின் ஆட்சிதான் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com