அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியது:
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
அதைப்போல, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். இதன் மூலம், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 20 லட்சம் பேர் பயன்பெறுவர்.