ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு: ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு  வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு  வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரை அவதூறு செய்யும் வகையில் பேசியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர், வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com