தமிழ்நாடு
காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். குறுவை சாகுபடிக்கு, காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு, காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் விடுத்த உத்தரவை அமல்படுத்தி, தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.