குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது

குற்றாலம் பகுதியில் சாரல் மழையின் அளவு குறைந்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்தது.
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்டவரிசையில் காத்து நின்ற சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்டவரிசையில் காத்து நின்ற சுற்றுலாப் பயணிகள்.


குற்றாலம் பகுதியில் சாரல் மழையின் அளவு குறைந்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்தது.
குற்றாலம் பகுதியில் இரு தினங்களாகப் பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் திங்கள் கிழமை தண்ணீர் வரத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. 
அதைத் தொடர்ந்து, நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. 
சாரல் மழையின் அளவு குறைந்ததையடுத்து பேரருவியில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். 
ஐந்தருவியில் மூன்று கிளைகளில் மட்டும் தண்ணீர் விழுகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்ததால் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com