திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு திங்கள்கிழமை ஸ்ரீ காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவரை கோயில் சிவாச்சாரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சந்நிதி, அருணாசலேஸ்வரர் சந்நிதி, உண்ணாமுலையம்மன் சந்நிதி, நவகிரக சந்நிதிகளில்
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் வளாகத்தைச் சுற்றி வலம் வந்த அவர், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.