குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், அதைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கவில்லை என்றும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.