நீர்நிலைகளை திமுக ஆக்கிரமித்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நீர் நிலைகளை திமுகவினர் ஆக்கிரமித்து விட்டதாக அதிமுக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். இது கண்டிக்கத்தக்கது.
மு.க.ஸ்டாலின் முதல்வரானால் அடுத்த 24 மணி நேரத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார்.
தற்போதைய ஆட்சியாளர்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் பதவி விலக வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திமுக கடுமையாக எதிர்க்கும் என்றார் அவர்.