திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ஆம் தேதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. சபாநாயகருக்கு எதிராக திமுக அளித்த நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, திமுக சட்டப்பேரவை கொறடா அர. சக்கரபாணி விடுத்துள்ள அறிவிப்பில்,
"திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.