மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்வதால் அவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்திடவேண்டும்.
குறிப்பாக புதிய மீன்பிடி படகுகளை கடலில் செலுத்துவதற்கு அரசிடம் அங்கீகாரம் பெறமுடியாமல் இருப்பது மீனவர்களுக்கு வேதனை அளிக்கிறது.
மேலும் படகுகளுக்குப் பதிவு எண் வழங்குவதும் இல்லை எனக் கூறுகின்றனர். எனவே, படகுகளுக்குப் பதிவு எண் வழங்கவும், படகுகள் கடலுக்குச் செல்லும் போது பாதுகாப்பு கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.