மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கூடாது: வைகோ

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. 
இந்நிலையில் கடந்த ஜூன் 2- ஆம் தேதி கர்நாடக அரசு, கர்நாடகத்தின் வறட்சியைச் சமாளிக்கவும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறது.  மத்திய அரசு இதற்கு அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com