மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூன் 2- ஆம் தேதி கர்நாடக அரசு, கர்நாடகத்தின் வறட்சியைச் சமாளிக்கவும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசு இதற்கு அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.