புழல் சிறையில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி

புழல் சிறையில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு, ஜூலை மாதம் 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


புழல் சிறையில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு, ஜூலை மாதம் 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  சென்னை மாவட்டம் புழல் சிறை 1 -இல்  காலியாக உள்ள சிப்ப எழுத்தர்(packer clerk)  பணி இடத்துக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, packing  பணியில் 3 ஆண்டுகளுக்கு குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.15,900-50,400 என்று நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். அதே போல் துப்புரவுப் பணியாளர் பணி இடத்துக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரம்புக்குள் (அதிகபட்சமாக - எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. - 35, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 32, ஓ.சி-30) இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.15,700- ரூ.50,000 என்று நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தினை சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை -1(தண்டனை) புழல், சென்னை-66 (தொலைபேசி-044-26590615) என்ற முகவரிக்கு ஜூலை 10 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. 
முன்னதாக விண்ணப்பத்தினை ஜூன் 28 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூலை 10 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com