தமிழக வளர்ச்சிக்கே அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அமைத்தது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வருகின்றனர். அதிமுக - பாஜக - பாமக கூட்டணி அமைத்தது தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தான்.
கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நமது ராணுவம் குறித்து கேள்வி எழுப்பியது வெட்கக்கேடானது. ராணுவத்தின் தியாகத்தை காங்கிரஸ் கேலி செய்வது தான் உண்மை. நாட்டின் பிரஜையாக இருந்துகொண்டு ராணுவம் குறித்து எப்படி கேள்வி எழுப்புகின்றனர் எனத் தெரியவில்லை.
தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் கூறினார்.