கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு தருவதுபற்றி தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகள், திருநம்பிகளை தனி பிரிவாக பிரித்து கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தர கோரியும் எந்த ஒரு பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட கோரியும் கிரேஸ்பானு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.