மதுரை: மக்களவைத் தேர்தலின் போது காவல்துறை டிஜிபியாக ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக மதுரைக் கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட புகார்கள் உள்ளன. எனவே மக்களவைத் தேர்தலின் போது காவல்துறை டிஜிபியாக அவர் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று முறையீடு வைக்கப்பட்டுள்ளது.