தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 மே மாதம் சென்னை சேப்பாக்கம் அருகே மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி வேல்முருகன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.