அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
17-ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்படுவதாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படுவதாக அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.