தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தென் உள்கர்நாடகம், அதையொட்டிய பகுதிகளில், வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும், உள் தமிழகத்தின் சில இடங்களில், வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
 மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் திங்கள்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக காணப்படும். கடல் அலைகள் 1.7 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை உயர எழும்ப வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com