கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்குப் பயந்து.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி

கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்குப் பயந்தே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு சீட் வழங்கவில்லை என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்குப் பயந்து.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி


கடம்பூர் ராஜூவின் மிரட்டலுக்குப் பயந்தே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு சீட் வழங்கவில்லை என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்கண்டேயன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மார்கண்டேயன், அதிமுகவில் கடம்பூர் ராஜூ எந்த தேர்தல் வெற்றிக்காகவும் பாடுபடவில்லை. எந்த வெற்றிக்கும் அவர் காரணமாகவும் இல்லை. கடம்பூர் ராஜுவின் மிரட்டலுக்கு பயந்துதான் விளாத்திகுளத்தில் எனக்கு ஓபிஎஸ்  சீட் ஒதுக்கவில்லை. 

நான் அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறும் மார்கண்டேயன், கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com