அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வி.பி. கலைராஜன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அமமுக அமைப்புச் செயலாளராக இருந்த வி.சுகுமார் பாபு தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.