சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ரூ.75.62 க்கும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ரூ.70.37 க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.