மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, போலீஸார், பறக்கும்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்அனுமதி பெறாமல் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்ததாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.