பாபநாசம் அருகே புதன்கிழமை மது என நினைத்து பெயிண்டை குடித்த பெயிண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை கீழவழிநடப்பு பகுதியை சேர்ந்த பெயிண்டர் குமார் (51). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை மது போதையிலிருந்த குமார் வீட்டிலிருந்த பெயிண்டை மது என குடித்து விட்டாராம்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். புகாரின்பேரில், பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.