திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணிக்கு பதில் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார் என கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக என். தமிழ்மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஓசூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக கர்நாடக மாநில கழக செயலாளர் வி.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணிக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.