காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தால் நிச்சயம் வெல்வேன்: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தால் நிச்சயம் வெல்வேன்: கார்த்தி சிதம்பரம்

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முதலில் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது. 

இந்நிலையில், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:

நான் இரண்டாவது முறையாக சிவகங்கையில் களமிறங்குகிறேன். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் காரணமாக நான் வெற்றி பெறுவது நிச்சயம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வருகிறது. அங்கிருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2 முறையும் ப.சிதம்பரம் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com