தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு ஓராண்டு கழித்து நோட்டீஸ் அனுப்பியது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரங்களோடு சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்திருந்தார். அதோடு, மூன்று பேரும் அமமுகவில் பதவி வகிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களாக இருந்து கொண்டு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டு அவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உரிய தருணம் வந்ததால்தான் ஓராண்டு கழித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எடுத்தோம், கவிழ்த்தோம் என நடவடிக்கை கூடாது என்பதால்தான் தற்போது நோட்டீஸ்.
3 பேரும் விளக்கம் அளித்த பிறகு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது என்றார்.