சேலத்தில் பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர் வேல். கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கதிர்வேல் சேலம் காரியப்பட்டி என்ற இடத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ரவுடி கதிர்வேல் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த மோதலில் ரவுடி கதிர்வேல் தாக்கியதில் போலீசார் சிலரும் காயமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.