குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சாலையோரத்தில் மே மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், கோடை காலத்தில் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். தற்போது குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சாலையோரத்தில் மே மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் வாகனங்களில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த மலர் நீலகிரி மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலர்கள் என்று அழைக்கப்படுகின்றன.