திமுக - அமமுக இடையே மறைமுக கூட்டணி இருந்து வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜகவுக்கு ஏற்கெனவே இருந்த ஆதரவைவிட கூடுதலாக ஆதரவு கிடைத்து வருகிறது. 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். வரும் 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.
தினகரன் தன்னுடைய கட்சியை முழுமையாக திமுகவிடம் அடகு வைத்துவிட்டார். திமுக - அமமுக இடையே மறைமுக கூட்டணி இருந்து வருகிறது என்றார்.